Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தி நகரில் குவிந்த கூட்டம்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்!

Webdunia
ஞாயிறு, 18 ஜூலை 2021 (17:18 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் குறைந்ததை அடுத்து தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறைந்துவிட்டதாகவும் முடிந்து விட்டதாக எண்ணி பொதுமக்கள் வழக்கம்போல் நடமாட தொடங்கியதால் கொரோனாவுக்கு கொண்டாட்டம் ஏற்பட்டு உள்ளது 
 
குறிப்பாக சென்னை தி நகரில் உள்ள கடைகளிலும் பாண்டிபஜார் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிவதை பார்க்கும் போது கொரோனா மீண்டும் பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சனி ஞாயிறு விடுமுறை நாள் என்பதாலும் பக்ரீத் பண்டிகை இன்னும் ஓரிரு நாட்களில் வர இருப்பதாலும் துணிக்கடைகள் நகைக்கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது என்பதும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற அரசின் விதிமுறை பல கடைகளில் காற்றில் பறக்கவிட பட்டதாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் நேற்று சென்னை தி நகரில் உள்ள கடையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை அனுமதித்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments