சேமிப்பு கணக்குகளுக்கு இனி மாதந்தோறும் வட்டி: ஐடிஎஃப்சி வங்கி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 18 ஜூலை 2021 (17:16 IST)
சேமிப்பு கணக்குகளுக்கு அனைத்து வங்கிகளும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கி வரும் நிலையில் ஐடிஎஃப்சி வாங்கி மட்டும் மாதந்தோறும் வட்டி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஏற்கனவே ரிசர்வ் வங்கி மாதம் ஒரு முறை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி வழங்கலாம் என்று அனுமதி அளித்தது. ஆனால் பெரும்பாலான வங்கிகள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஐடிஎப்சி வாங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களில் சேமிப்பு கணக்கில் உள்ள இருப்பு தொகை மாதந்தோறும் வட்டி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் வட்டி கணக்கிடப்பட்டு அந்த கூட்டுத் தொகையை ஒரு மாதம் கழித்து மொத்தமாக அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து ஐடிஎப்சி வங்கி போலவே மற்ற வங்கிகளும் மாதந்தோறும் சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

அடுத்த கட்டுரையில்
Show comments