Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ்: சுகாதாரத்துறை அறிவிப்பு!

கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ்: சுகாதாரத்துறை அறிவிப்பு!
, ஞாயிறு, 18 ஜூலை 2021 (07:59 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒருபக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவில் ஏற்கனவே 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் ஐந்து பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரளாவில் இதுவரை ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரே ஒரு பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஒரு பெண்ணும் திருவனந்தபுரத்தில் சுகாதார ஊழியராக பணிபுரிந்து வந்தவர் என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
தற்போது ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட  35 பேரில் 11 பேர் மட்டும்தான் சிகிச்சைகள் இருப்பதாகவும் மீதி 24 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்றும் நாளையும் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!