Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை காவல்துறை ஆய்வாளர் சுட்டுக்கொலை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (08:22 IST)
சென்னை கொளத்தூரில் சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் மேற்பகுதியில் துளையிட்டு நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், கொள்ளைக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்களே காரணம் என்பதை சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் நாதுராம், கணேஷ் உள்ளிட்ட மூன்று ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் தான் குற்றவாளிகள் என தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க சென்னையை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டி தலைமையில் ஒரு தனிப்படை ராஜஸ்தான் சென்றது

இந்த நிலையில் ராஜஸ்தானில் குற்றவாளிகளை தனிப்படை போலிசார் நெருங்கிய நிலையில் மதுரவாயல் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக்கொலை திடீரென சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இன்னொரு காவல்துறை அதிகாரி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நகைக்கொள்ளையர்களே செய்திருக்க வேண்டும் என்றும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக போலீஸ் ராஜஸ்தான் விரைந்துள்ளதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments