Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கால் காதலியை பார்க்க முடியவில்லை: சோகத்தில் தற்கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்

Webdunia
புதன், 13 மே 2020 (20:30 IST)
கொரோனா வைரஸ் காராணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 40 நாட்களாக காதலியை பார்க்க முடியாத சோகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்ற 26 வயது இளைஞர் தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால் அவரால் கடந்த 40 நாட்களாக காதலியை பார்க்க முடியவில்லை. 
 
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஹரிபிரசாத் திடீரென தனது அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விசாரணை செய்த போது காதலியை பார்க்க முடியாத சோகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஹரிபிரசாத்தின் செல்போனை ஆய்வு செய்து வரும் போலீசார் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments