Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கால் காதலியை பார்க்க முடியவில்லை: சோகத்தில் தற்கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்

Webdunia
புதன், 13 மே 2020 (20:30 IST)
கொரோனா வைரஸ் காராணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 40 நாட்களாக காதலியை பார்க்க முடியாத சோகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்ற 26 வயது இளைஞர் தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால் அவரால் கடந்த 40 நாட்களாக காதலியை பார்க்க முடியவில்லை. 
 
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஹரிபிரசாத் திடீரென தனது அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விசாரணை செய்த போது காதலியை பார்க்க முடியாத சோகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஹரிபிரசாத்தின் செல்போனை ஆய்வு செய்து வரும் போலீசார் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments