Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகாலை முதல் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறையா?

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (07:58 IST)
தமிழகத்தில் அடுத்த 48 நேரத்திற்கு சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையின் முக்கிய இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. 
 
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்து ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று பள்ளீகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனையடுத்து மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
 
சென்னையில் நேற்றிரவும் இன்று காலையும் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, மடிப்பாக்கம், மாங்காடு, வேளச்சேரி, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு காஞ்சிபுரம், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
அதேபோல் சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments