கனமழையால் கீழே இறங்கிய தண்டவாளம்: சென்னையில் பரபரப்பு!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (14:34 IST)
கனமழையால் கீழே இறங்கிய தண்டவாளம்: சென்னையில் பரபரப்பு!
தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசு மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகிறது 
 
அந்த வகையில் தற்போது கனமழை காரணமாக சென்னை ரயில்வே தண்டவாளம் கீழே இறங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே ரயில்வே தண்டவாளம் திடீரென கீழே இறங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்தது 
 
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ரயில்வே துறை அதிகாரிகள் வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் அந்த பகுதியில்தான் ரயில்வே தண்டவாளம் கீழே இறங்கியதும் கண்டுபிடித்தனர்
 
இதனையடுத்து பாதிப்பை சரி செய்ய ரயில்வே அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்னும் சில நிமிடங்களில் கீழே இறங்கிய ரயில்வே தண்டவாளம் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அடுத்த கட்டுரையில்
Show comments