ரூ.5.52 கோடி கடன் பாக்கி: ஏலத்திற்கு வந்த விஜயகாந்த் வீடு, கல்லூரி, நிலம்...

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (12:13 IST)
ரூ.5.52 கோடி கடன் பாக்கியால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு, கல்லூரி, நிலம் ஆகியவை ஏலத்தில் விடப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. 
 
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சுமார் ரூ.5.52 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதால் இந்திய ஓவர்சீஸ் வங்கி விஜயகாந்தின் வீடு, நிலம், வணிக கட்டடம், கல்லூரில் ஆகியவற்றை ஏலத்தில் விடுகிறது. 
 
விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழில் வெளியிட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26 ஆம் தேது ஏலத்துக்கு வருகிறது.
அதேபோல் மதுராந்தகம் அருகே மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலத்திற்கு விடப்படுகிறதாம். வீடு மற்றும் கல்லூரியை தவிர்த்து சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் 4,651 சதுர அடி நிலம் மற்றும் வணிக கட்டடமும் ஏலத்தில் விடப்படுகிறது. 
 
கடன் பாக்கி, வட்டி மற்றும் இதர செலவுகளை வசூலிக்க வியகாந்தின் சொத்துகள் ஏலத்தில் விடப்படுவதாக இந்திய ஓவர்சீஸ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments