Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம சிறுவன்! – விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (14:09 IST)
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்மமாக சுற்றி திரிந்த சிறுவனை போலீஸார் பிடித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சிறுவன் ஒருவர் திரிந்து கொண்டிருந்ததை அப்பகுதி போலீஸார் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுவன் மெட்ரோ ரயில் நிலையத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே சுற்றி வந்துக் கொண்டிருந்தது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சிறுவனை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர். சிறுவன் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவன் என்றும், வீட்டில் சண்டையிட்டு கொண்டு வெளியே வந்து விட்டதாகவும், வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள்ளேயே சுற்றி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் யார் என விசாரித்து அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். சாப்பிடாமல் சுற்றி திரிந்த சிறுவனுக்கு சுவையான பிரியாணி வாங்கி கொடுத்த போலீஸார், பெற்றோர் வந்ததும் அவர்களிடம் சிறுவனை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments