மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம சிறுவன்! – விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (14:09 IST)
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்மமாக சுற்றி திரிந்த சிறுவனை போலீஸார் பிடித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சிறுவன் ஒருவர் திரிந்து கொண்டிருந்ததை அப்பகுதி போலீஸார் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுவன் மெட்ரோ ரயில் நிலையத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே சுற்றி வந்துக் கொண்டிருந்தது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சிறுவனை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர். சிறுவன் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவன் என்றும், வீட்டில் சண்டையிட்டு கொண்டு வெளியே வந்து விட்டதாகவும், வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள்ளேயே சுற்றி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் யார் என விசாரித்து அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். சாப்பிடாமல் சுற்றி திரிந்த சிறுவனுக்கு சுவையான பிரியாணி வாங்கி கொடுத்த போலீஸார், பெற்றோர் வந்ததும் அவர்களிடம் சிறுவனை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments