Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் தவித்த கர்ப்பிணி பெண்; விரைந்து மீட்ட போலீஸார்! – குவியும் பாராட்டுகள்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (10:52 IST)
சென்னையில் தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளம் சூழப்பட்டிருக்கும் நிலையில் கர்ப்பிணி பெண்ணை போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பத்திரமாக முகாம்களுக்கு காவல்துறையினர், மீட்பு படையினர் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் வேளச்சேரி சராகத்திற்குட்பட்ட ஏஜிஎஸ் காலனியில் 3 அடிக்கும் மேல் மழைநீர் சூழ்ந்து வீடுகளை மூழ்கடித்துள்ளது. அங்குள்ள சொக்கலிங்கம் நகர் பகுதியில் முதல் தளத்தில் வசித்த 9 மாத கர்ப்பிணி ஜெயந்தியை போலீஸார் பத்திரமாக மீட்டு படகு மூலம் அழைத்து சென்று அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சிக்கித்தவித்த 50க்கும் மேற்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். போலீஸார் மக்களை மீட்ட வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments