Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது.. மோசடிக்கு உடந்தையா?

Siva
புதன், 17 ஜூலை 2024 (08:09 IST)
100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை காவல் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நில மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை அடுத்து நேற்று அவர் கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தொடர்புடைய நில மோசடி வழக்கில் சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நில மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுவதை அடுத்து வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸ் சார் கைது செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments