Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆயிரம் போதை மாத்திரைகள், டானிக்குகள் பறிமுதல்! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (08:34 IST)
சென்னை வேளச்சேரியில் போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை விற்று வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வேளச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் அங்கு சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 5 பேர் நடமாடியுள்ளனர்.

அவர்களை பிடித்து விசாரித்த போலீஸார் அவர்களது பையை சோதனை செய்தபோது அதில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள் மற்றும் 20 டானிக் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். சளி, இருமலுக்கு பயன்படுத்து இந்த டானிக்குகளை போதை பொருளாக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக 5 பேரையும் கைது செய்து விசாரித்த போலீஸார் மாத்திரைகள், டானிக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments