Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆயிரம் போதை மாத்திரைகள், டானிக்குகள் பறிமுதல்! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (08:34 IST)
சென்னை வேளச்சேரியில் போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை விற்று வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வேளச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் அங்கு சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 5 பேர் நடமாடியுள்ளனர்.

அவர்களை பிடித்து விசாரித்த போலீஸார் அவர்களது பையை சோதனை செய்தபோது அதில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள் மற்றும் 20 டானிக் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். சளி, இருமலுக்கு பயன்படுத்து இந்த டானிக்குகளை போதை பொருளாக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக 5 பேரையும் கைது செய்து விசாரித்த போலீஸார் மாத்திரைகள், டானிக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments