Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

சென்னையில் 40 நாட்களுக்குப் பின் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: பயணிகள் ஆர்வம்

Advertiesment
சென்னை
, திங்கள், 21 ஜூன் 2021 (08:53 IST)
சென்னையில் 40 நாட்களுக்கு பின்னர் இன்று மெட்ரோ ரயில் ஓட தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்
 
ஜூன் 28ஆம் தேதி வரையிலான ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என்பது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இன்று காலை ஆறு முப்பது மணிக்கு மெட்ரோ ரயில் ஓட தொடங்கியது. சென்னையில் 40 நாட்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளதை அடுத்து பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்து வருகின்றனர் 
 
மெட்ரோ ரயிலில் பயணிகள் அமர்ந்து மட்டுமே செல்ல வேண்டும் என்றும் பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து இருக்கவேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும்,மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும் இதர நேரத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 40 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் மெட்ரோ ரயில் ஓட தொடங்கியதை அடுத்து சென்னையில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக கருதப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

16வது சட்டசபையின் முதல் கூட்டம்: பெரும் எதிர்பார்ப்புடன் இன்று கூடுகிறது!