சென்னையில் 8 மாடிக் கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்.. வெளிநாட்டு பாணியில் அசத்தல் திட்டம்..!

Mahendran
சனி, 4 அக்டோபர் 2025 (16:59 IST)
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சோழிங்கநல்லூரில் ஒரு பிரம்மாண்டமான உயர்மட்ட ரயில் நிலையம் அமைய உள்ளது. இது  மாதவரம் - சிப்காட் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களும் சந்திக்கும் இணைப்பு முனையமாக செயல்படும்.
 
இந்த நிலையத்தின் நுழைவாயில் அருகே 8 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடம் கட்டப்படவுள்ளது. ரயில் பாதைகள் இந்த கட்டிடம் வழியாகவே செல்லும் என்பது இதன் சிறப்பு.
 
5-வது வழித்தட நடைமேடை சாலையில் இருந்து 28.8 மீட்டர் உயரத்திலும், 3-வது வழித்தட நடைமேடை 21.8 மீட்டர் உயரத்திலும் அமையவுள்ளது.
 
வெளிநாட்டு பாணியில் அமைய இருக்கும் இந்த நிலையத்தின் வடிவமைப்பு, மேலே இருந்து பார்க்கும்போது இரண்டு வழித்தடங்கள் குறுக்காகக் கடக்கும் பிளஸ் (+) குறியீடு போலக் காட்சியளிக்கும். 8 மாடிக் கட்டிடத்தில் முதல் தளம் வாகன நிறுத்துமிடமாகவும், 6 முதல் 8-வது மாடிகள் வரை மெட்ரோ அலுவலகம், கடைகள் போன்ற வசதிகளுடன் அமையவுள்ளது.
 
சோழிங்கநல்லூர் நிலையம் போலவே, அருகிலுள்ள துரைப்பாக்கம் ரயில் நிலையமும் இதேபோன்ற சிறப்பம்சங்களுடன் கட்டப்படவுள்ளது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments