Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான்கு நாட்களுக்கு மிதமான மழை, 29ஆம் தேதி கன மழை: வானிலை அறிவிப்பு

meteorological
, செவ்வாய், 25 அக்டோபர் 2022 (12:56 IST)
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் அக்டோபர் 29ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்க கடலில் தோன்றிய புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
புயல் கரையை கடந்த பிறகு மழை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து அக்டோபர் 29ஆம் தேதி கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைனர் பெண்ணை ஐட்டம்என அழைத்த நபர் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!