Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைனர் பெண்ணை ஐட்டம் என அழைத்த நபர் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

jail
, செவ்வாய், 25 அக்டோபர் 2022 (12:51 IST)
மைனர் பெண்ணை ஐட்டம் என அழைத்த நபருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை அளித்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர்  மைனர் பெண்ணை ஐட்டம் என அழைத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் மீது பெண்ணின் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர்
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த வழக்குநீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் 7 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது 
 
இந்த தீர்ப்பில் மைனர் பெண்ணை ஐட்டம் என அழைத்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களை இழிவாக பேசுவதற்காக ஆண்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவதாக நீதிபதி இந்த தீர்ப்பின் போது கருத்து தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல.. புல்வெளியில் பாய்ந்த விமானம்! – பிலிப்பைன்சில் அதிர்ச்சி!