Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (15:18 IST)
தமிழகத்தில் மழைக்காலம்,குளிர் காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில் தென் தமிழகத்தில் நாளை சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அதேபோல் வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் குறிப்பாக இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஆனால் அதே சமயத்தில் உள் தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை மட்டும் லேசான பனிமூட்டம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் மட்டும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments