Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்பராஸ் கானை வாங்க முடிவு செய்துள்ளதா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

சர்பராஸ் கானை வாங்க முடிவு செய்துள்ளதா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

vinoth

, புதன், 21 பிப்ரவரி 2024 (07:34 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி  ராஜ்கோட்டில் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரர் சர்பராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் அரைசதம் அடித்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய  வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சர்பராஸ் கான். இதன் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் மீண்டும் அவருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னரே ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடி இருந்தாலும், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மினி ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னை அணியில் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே காயமடைந்துள்ள நிலையில் அவரால் ஐபிஎல் விளையாடமுடியாமல் போனால் அவருக்கு பதில் சர்பராஸ் கானை வாங்க சி எஸ் கே முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2 வது குழந்தை....என்ன பெயர் தெரியுமா?