Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை அறிவிப்பு!

meteorological
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (07:50 IST)
இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
 கனமழை காரணமாக சென்னையில் உள்ள நீர் ஆதாரங்களான ஏரிகள் நிரம்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் மழை பெய்யும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேத்திக்கு திருமணம்: உலக தலைவர்கள் வருகை!