Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றிரவு சென்னையில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Advertiesment
இன்றிரவு சென்னையில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Mahendran

, வியாழன், 5 செப்டம்பர் 2024 (17:24 IST)
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியுள்ளது அடுத்து தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இரவு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செய்யுளை தவறாக எழுதிய மாணவனை அடித்த தமிழாசிரியர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்..!