Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல பகுதிகளில் மழை: குளிர்ந்த தட்பவெப்பத்தால் மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (08:15 IST)
நேற்று இரவு முதல் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து சென்னை முழுவதும் தற்போது குளிர்ந்த தட்பவெப்பம் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் வெயில் கொளுத்திய நிலையில் வெப்ப தட்ப வெப்பம் காரணமாக மக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடப்பட்டது
 
இந்த நிலையில் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் தற்போது மிதமான மழை முதல் நல்ல மழை பெய்து வருகிறது 
 
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்து வருவதால் குளிர் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் அடுத்து  இருபத்தி நான்கு மணி நேரத்தில் சென்னையில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments