Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

Siva
புதன், 11 ஜூன் 2025 (08:05 IST)
இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை அடுத்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதைப் பார்த்து வருகிறோம். நேற்று கூட சென்னையில் கனமழை பெய்தது என்பதும், இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். 
 
நாளை தமிழகத்தின் தென்பகுதியிலும், வட தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும், குறிப்பாக நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜூன் 13, 14 ஆகிய நாட்களிலும் தமிழகத்திலும், புதுவையிலும் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments