Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில் திருவிழாக்களில் பக்திக்கு பதில் வன்முறை: உயர்நீதிமன்றம் வேதனை..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (16:36 IST)
கோவில் திருவிழாக்களில் பக்திக்கு பதில் வன்முறை தான் அதிகமாக இருக்கிறது என உயர்நீதிமன்றம் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளது. 
 
சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவுக்கு பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 
யார் பெரியவர் என்பதை நிரூபிக்கவே கோயில் விழாக்கள் நடத்தப்படுகின்றன என்றும், கோயில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என்றும், வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்,.
 
சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தெரிவித்த இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments