Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்முடி மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு .. இன்று விசாரணை..!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (10:19 IST)
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என வேலூர் நீதிமன்றம் விடுவித்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. 
 
இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இதுவரை மேல்முறையீடு செய்யப்படவில்லை.
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று பட்டியலில் இடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments