Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையின் மனைவியாக 10 ஆண்டுகளாக நடித்த மகள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (07:47 IST)
இறந்த தந்தையின் மனைவியாக 10 ஆண்டுகள் அவருடைய மகள் நடித்து ஓய்வூதியம் பெற்று வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்  வருவாய் துறை அலுவலகத்தில் பணியாற்றியவர் வஜாஹத் உல்லா கான். இவர் கடந்த ஜனவரி மாதம் காலமான நிலையில் அவருக்கு முன்பே அவருடைய மனைவி சபியா பேகம் இறந்துவிட்டதாக தெரிகிறது. 
 
ஆனால் அவருடைய மகள் பர்வேஸ் என்பவர் 10 ஆண்டுகளாக அவருடைய மனைவி என்று கூறி ஓய்வூதியம் பெற்று வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  போலி ஆவணங்கள் கொடுத்து சட்ட விரோதமாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்று வந்ததை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
 
போலி ஆவணங்கள் தயாரித்தல் மோசடி செய்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுவரை அவர் அரசிடம் இருந்து 12 லட்சத்திற்கும் மேல் ஓய்வூதியம் பெற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments