Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டை பிரார்த்தனை கூடமாக மாற்றினால் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Advertiesment
Highcourt

Siva

, செவ்வாய், 24 ஜூன் 2025 (07:59 IST)
குடியிருக்கும் வீடுகளில் பிரார்த்தனை கூடங்கள் நடத்தப்பட்டால், அதுகுறித்து  பிரார்த்தனை கூடம் நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவாரூரில் உள்ள குடவாசல் என்ற பகுதியில், பாதிரியார் ஜோசப் வில்சன் என்பவர் தனது வீட்டில் பிரார்த்தனை கூடம் நடத்தி வந்தார். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குடியிருப்பு வீட்டை உரிய அனுமதி இல்லாமல் பிரார்த்தனை கூடமாக மாற்ற முடியாது என்றும், மீறி பிரார்த்தனை செய்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏராளமான பிரார்த்தனை கூடங்கள் வீடுகளில் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அவற்றின் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழிக்கு பழி.. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்! கத்தார் மக்கள் அச்சம்..!