Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக எம்எல்ஏ வெற்றி செல்லும்: சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திமுக எம்எல்ஏ வெற்றி செல்லும்: சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
, செவ்வாய், 10 மார்ச் 2020 (20:30 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் திமுக சார்பில் சீதாபதி என்பவர் போட்டியிடார். இவருக்கு 61,879 வாக்குகளும் இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் என்பவருக்கு 61,778 வாக்குகளும் கிடைத்தது. இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 101 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ சீதாபதி வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதியின் வெற்றி செல்லும் என்பது உறுதியாகியுள்ளது
 
ஏற்கனவே திமுக எம்எல்ஏக்கள் குறைந்து கொண்டே வரும் நிலையில் தற்போது இந்த தீர்ப்பு திமுக வட்டாரத்தில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்வாடிகளின் கடைகளை பூட்டுவோம்: போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு