Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நடக்கவிருந்த சென்னை நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து.. போட்டி ஒத்திவைப்பு..!

Mahendran
புதன், 6 ஆகஸ்ட் 2025 (10:31 IST)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அங்கு நடைபெறவிருந்த 'குவான்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர் 2025' செஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில், நேற்று நள்ளிரவு 9-வது மாடியில் மின் கசிவு காரணமாகத் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்தின்போது, விடுதியில் தங்கியிருந்த அனைத்து செஸ் வீரர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் மற்றொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெற இருந்த இந்த கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்டங்கள் அனைத்தும் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி போட்டியின் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினமும் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தால், செஸ் வீரர்கள் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments