Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு மழை வந்தாச்சு... 6 மாத காத்திருப்பு ஓவர்!!

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (15:34 IST)
6 மாத காத்திருப்புக்கு பலன் தரும் விதமாக இன்று சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
இன்னும் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் 23 ஆம் தேதிக்கு பிறகு வெப்பம் குறைந்து மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையல் அறிவித்திருந்த நிலையில், அதை கேட்டு சென்னைக்கு எப்போது மழை வரும் என ஆறு மாதங்களாக காத்திருந்த சென்னைவாசிகள் தற்போது மழையை ஜாலியாக ரசித்து வருகின்றனர். 
 
கத்திரி வெயில் துவங்கியதற்கு முன்னர் இருந்தே ஆட்டத்தை காட்டி வெப்பம் தணிந்து இப்போது சென்னையின் சில பகுதியில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 
மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல் மழையும் திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
 
இதே போன்று மழை இன்னும் சில நாட்களுக்கு சென்னையில் தொடர்ந்தால் வெப்பத்தில் இருந்தும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து மக்கள் விடுபடுவார்கள் என நம்பலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments