Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது வரலாறு படைக்கட்டும்!.. பார்முலா 4 கார் ரேஸ் குறித்து அமைச்சர் உதயநிதி..!

Siva
சனி, 31 ஆகஸ்ட் 2024 (07:11 IST)
தெற்காசியாவிலேயே முதன்முறையாக நடைபெறுகிற பார்முலா 4 போட்டி இரண்டு நாட்கள்  சென்னை தீவுத்திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. 
 
இப்போட்டிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். 
 
போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் – பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற Grand Stands, மாண்புமிகு அமைச்சர்கள் – நீதியரசர்கள் - அதிகாரிகளுக்கான Galleries, Race Drivers’ Stand – Garage போன்ற வசதிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் அது தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தோம். 
 
மேலும், ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கான வழிகள் – சிகிச்சையிலிருப்போர் & மருத்துவமனை செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படாத வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தோம். 
 
சென்னையில் நடைபெறுகிற இந்த பார்முலா 4 போட்டியினைத் திட்டமிட்டபடி சிறப்பாகவும் – பாதுகாப்புடனும் – மக்கள் மகிழும் வண்ணமும் நடத்திட சென்னை மாநகராட்சி – காவல்துறை - உள்ளிட்ட பல்வேறு  துறைகளின் அதிகாரிகள் – அலுவலர்களை வலியுறுத்தினோம்.
 
பார்முலா 4 கார் பந்தயம் புது வரலாறு படைக்கட்டும்!
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுக.! முதல்வர் உடல்நிலை பற்றிப் பேச இபிஎஸ்க்கு தகுதி இருக்கிறதா? ஆர்.எஸ்.பாரதி..!!

வாயில் பாம்பு கடித்ததில் இளைஞர் பலி.! விபரீதத்தில் முடிந்த ரீல்ஸ்.!!

கட்சி ஆரம்பித்த நடிகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.! யாரை குறிப்பிட்டு சொல்கிறார் நாராயணசாமி.?

முதலீடுகள் குவிவதாக மாயத்தோற்றம்.! தமிழகம் பெற்ற தொழில் முதலீடுகள் எவ்வளவு? - அன்புமணி சரமாரி கேள்வி.!

தவறான உறவுமுறை காதலால் வாலிபர் வெட்டிக்கொலை பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments