Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது வரலாறு படைக்கட்டும்!.. பார்முலா 4 கார் ரேஸ் குறித்து அமைச்சர் உதயநிதி..!

Siva
சனி, 31 ஆகஸ்ட் 2024 (07:11 IST)
தெற்காசியாவிலேயே முதன்முறையாக நடைபெறுகிற பார்முலா 4 போட்டி இரண்டு நாட்கள்  சென்னை தீவுத்திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. 
 
இப்போட்டிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். 
 
போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் – பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற Grand Stands, மாண்புமிகு அமைச்சர்கள் – நீதியரசர்கள் - அதிகாரிகளுக்கான Galleries, Race Drivers’ Stand – Garage போன்ற வசதிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் அது தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தோம். 
 
மேலும், ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கான வழிகள் – சிகிச்சையிலிருப்போர் & மருத்துவமனை செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படாத வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தோம். 
 
சென்னையில் நடைபெறுகிற இந்த பார்முலா 4 போட்டியினைத் திட்டமிட்டபடி சிறப்பாகவும் – பாதுகாப்புடனும் – மக்கள் மகிழும் வண்ணமும் நடத்திட சென்னை மாநகராட்சி – காவல்துறை - உள்ளிட்ட பல்வேறு  துறைகளின் அதிகாரிகள் – அலுவலர்களை வலியுறுத்தினோம்.
 
பார்முலா 4 கார் பந்தயம் புது வரலாறு படைக்கட்டும்!
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையத்திற்கு மாற்று இடம் எது என்பதை விஜய் தான் கூற வேண்டும்: அண்ணாமலை

பொங்கல் விடுமுறை எதிரொலி: மாதாந்திர பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு..!

அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி.. காப்பி பேஸ்ட் அறிக்கைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர்..!

சீமான் ஈழம் சென்றது உண்மைதான், ஆனால் அவர் எடுத்த புகைப்படம்.. கொளத்தூர் மணி

தமிழ் படிக்கும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகள்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments