Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் மலர் கண்காட்சி - கட்டணம் நிர்ணயம்!

சென்னையில் மலர் கண்காட்சி - கட்டணம் நிர்ணயம்!
, வியாழன், 2 ஜூன் 2022 (11:29 IST)
ஜூன் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சியை பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 
வருகிற ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கில் முதல் முறையாக தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. 
 
ஆம்,  ஜூன் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் வேளாந்துறை அமைச்சர் எம்.ஏர்.கே. பன்னீர் செல்வவம். மலர் கண்காட்சியை பார்வையிட பொது மக்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கபப்ட்டுள்ளது. நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.50 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும்  மலர் கண்காட்சிக்காக  ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோட்டோ e32s ஸ்மார்ட்போன் எப்படி?