Publish Date: Wed, 01 Jun 2022 (18:26 IST)
Updated Date: Wed, 01 Jun 2022 (18:30 IST)
சமீபத்தில் ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடைபெற்றது. இதில், சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜா ராஜினாமா செய்யவே, திரும்ப தோனி கேப்டன் பொறுப்பு ஏற்றார்.
இந்த நிலையில் , கடந்தாண்டு சேம்பியன் ஆன இந்த முறை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த,சென்னை அணி சூப்பர் லீக் சுற்றுடன் வெளியேறியது.
இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சென்னை அணியின் வீரர் தீபக் சாஹர் தனது காதலி பரத்வாஜை ஆக்ராவில் இன்று இரவு திருமணம் செய்து கொள்கிறார். வரும் ஜுன் 3 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிகிறது. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.