Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தண்டாவள சீரமைப்பு காரணமாக: சென்னை மின்சார ரயில்கள் ரத்து

தண்டாவள சீரமைப்பு காரணமாக: சென்னை மின்சார ரயில்கள் ரத்து
, சனி, 24 பிப்ரவரி 2018 (12:56 IST)
சென்னையில் ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு பல மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
 
இன்று ரத்தாகும் ரெயில்கள் கடம்பத்தூர்-கடற்கரை 12.05, திருவள்ளுர்- கடற்கரை 11.25, வேளச்சேரி-பட்டாபிரம் 12.55, மூர்மார்க்கெட்-ஆவடி, வேளச்சேரி-பி.டி.எம்.எஸ். 9.15, 12.55, திருத்தணி 11.20, திருவள்ளூர் 12.15, பி.டி.எம்.எஸ். 12.55 உள்ளிட்ட ரயில் சேவைகள் ரத்தாகிறது.
 
நாளை ரத்தாகும் ரயில்கள்: கடம்பத்தூர்-சென்னை கடற்கரை 12.05, சென்னை கடற்கரை-திருவள்ளூர் 12.15, அரக்கோணம் 1.35, சூலூர்பேட்டை 2.45, எம்.எம்.சி.-ஆவடி 12.35, கடம்பத்தூர் 10.30 உள்ளிட்ட ரயில் சேவைகள் ரத்தாகிறது.
 
வழக்கமாக திங்கள் முதல் வெள்ளி வரையில்தான் அலுவலகங்களுக்கு செல்வோர் கூட்டம் மின்சார ரயில்களில் அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பராமரிப்பு பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படம் நடிச்சா.. அரசியல் எப்போ? - ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி