Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோயம்பேடு சந்தைக்குள் வருபவர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம்… மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

கோயம்பேடு சந்தைக்குள் வருபவர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம்… மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
, திங்கள், 7 ஜூன் 2021 (07:41 IST)
கோயம்பேடு சந்தை இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் காய்கறி மொத்த மற்றும் சில்லரை விற்பனை மையமாக இருக்கும்  கோயம்பேடு சந்தைக்கு 30 சதவீதம் கடைகளுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தை வளாகத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ’தளர்வுகளை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17.40 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!