Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் குறைகிறது கொரோனா: நேற்று ஒரே நாளில் 1.14 லட்சம் பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் குறைகிறது கொரோனா: நேற்று ஒரே நாளில் 1.14 லட்சம் பேருக்கு பாதிப்பு!
, ஞாயிறு, 6 ஜூன் 2021 (09:57 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4 லட்சத்திற்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அது ஒரு லட்சமாக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த பாதிப்பு 2 கோடியே 88 லட்சம் ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 14.75 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் காரணமாக 2677 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொரோனாவா; உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 346,759 என அதிகரிப்பு என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி தர முதல்வர் ரங்கசாமி மறுப்பு ?