Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருந்து கடைகளுக்கு சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு!

மருந்து கடைகளுக்கு சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு!
, திங்கள், 7 ஜூன் 2021 (08:07 IST)
சென்னையில் உள்ள மருந்து கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா அறிகுறியுடனும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்த கொண்டவர்கள் பலரும் மருந்து கடைகளில் தேவையான மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். ஒரு சிலர் அரசுக்கு தங்களுக்கு பாதிப்பு இருப்பதையே தெரிவிக்காமல் தாங்களே சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக தெரியவருகிறது
 
இந்த நிலையில் மருந்து கடைகளுக்கு சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா அறிகுறிக்காக மருந்து வாங்குவோரின் விவரங்களை தினமும் அனுப்பி வைக்க வேண்டும் என மருந்து கடைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
 
இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று முதல் சென்னையில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளும் கொரோனாவுக்காக மருந்து வாங்க வருபவர்களின் முழு விபரங்களை சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்ககூடாது: காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம்