Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை; சென்னையில் கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்!

டெங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை; சென்னையில் கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (09:44 IST)
தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் டெங்கு காய்ச்சல் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் பரவும் அபாயம் உள்ளதால் கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளிலும் மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் ரூ.468 உயர்ந்தது தங்கம் விலை: அதிர்ச்சி தகவல்!