சென்னையில் மீண்டும் இறைச்சிக்குத் தடை – ஏன் தெரியுமா ?

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (16:17 IST)
வள்ளலார் ராமலிங்க அடிகளாரின்  நினைவு நாளை முன்னிட்டு வரும் 21-ம் தேதி சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் இறைச்சி விற்க வரும் ஜனவரி 21 ஆம் தேதி (திங்கள்) தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திக் குறிப்பில் ‘வரும் 21-ம் தேதி வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. இதேபோல், ஆட்டுக்க்கறி, மாட்டுக் கறி மற்றும் இதர இறைச்சி விற்கவும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேப் போல கடந்த 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று சென்னையில் இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து சட்ட விரோதமாக அதிகமான விலைக்கும்  இறைச்சி விறகப்பட்டதாக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதனால் மீண்டும் இந்த உத்தரவால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments