Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தீவிரமடைந்த கொரோனா! – மருத்துவ உதவிக்கு அவசர எண்கள்!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (10:52 IST)
சென்னையில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவ உதவிக்கான அவசர எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை உள்பட தமிழகத்தில் அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது.

சென்னையில் கொரோனா கண்டறியப்பட்ட பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்க தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, 044-46122300 மற்றும் 044-25384520 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மருத்துவ உதவி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments