Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா; 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதி!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (11:14 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளன. சென்னை மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனி கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் ஒரு தெருவில் 6 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை சென்னையில் 2,600 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது 6,500 தெருக்களில் 3 பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments