Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா; 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதி!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (11:14 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளன. சென்னை மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனி கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் ஒரு தெருவில் 6 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை சென்னையில் 2,600 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது 6,500 தெருக்களில் 3 பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments