Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? கலெக்டர் தகவல்

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? கலெக்டர் தகவல்
, புதன், 21 நவம்பர் 2018 (19:28 IST)
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து கொண்டிருக்கின்றது. இன்று மிலாடி நபி அரசு விடுமுறை என்றாலும் ஒருசில தனியார் நிறுவனங்கள் இயங்கியதால் அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இன்று அலுவகத்திற்கு சென்று வர சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த சென்னை கலெக்டர், 'சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி மழையை பொறுத்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். எனவே விடுமுறையா? இல்லையா? என்பது நாளை காலை தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'செல்பி’யால் மீண்டு வந்த வாழ்க்கை...ஒரு நெகிழ்ச்சி சம்பவம்