Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேக்ஸ் போடாத தமிழ்நாடு வேண்டுமா? தொழிலதிபரின் திடீர் கட்சி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (12:49 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் புதிதாக பல கட்சிகள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மிகப்பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவில் இருந்த முக்கிய அரசியல் ஆளுமைகள் தற்போது இல்லாததால் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறி மேலும் சில அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் புதிதாக அரசியல் கட்சிகளை தொடங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அனில்குமார் ஓஜா என்ற தொழிலதிபர் சென்னை சாலிகிராமத்தில் ‘மை இந்தியா பார்ட்டி’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதுகுறித்து நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்தியுள்ள அவர் தனது முதல் தேர்தல் வாக்குறுதியாக “வரிகள் இல்லா தமிழகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனில்குமார் ஓஜா கார்ப்பரேஷன் வங்கியில் ரூ.200 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments