Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிசை மாற்று வாரிய கட்டிடம் சரிந்தது; 24 வீடுகள் தரைமட்டம்! – சென்னையில் அதிர்ச்சி!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 27 டிசம்பர் 2021 (11:54 IST)
சென்னை திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரியாக கட்டிடம் முழுவதுமாக சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திருவொற்றியூர் அரிவாக்குளம் பகுதியில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் டி ப்ளாக் கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 23 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் இன்று காலை விரிசல் விழ தொடங்கியுள்ளது. இதனால் அங்கிருந்த குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் டி ப்ளாக் கட்டிடம் மொத்தமாக சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளனரா என தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர். இதுவரை எந்த உயிரிழப்புகளும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீறி வந்த லாரி அரசு பேருந்தில் மோதி விபத்து! – கோவையில் பரபரப்பு!