Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மேலும் ஒரு போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை? மன அழுத்தம் காரணமா?

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (08:22 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏறபடுத்தியது

இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை அயனாபுரம் கே-2 காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய 28 வயது சதீஷ் என்பவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்

சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் நேற்று வழக்கம் போல், இரவு பணிக்கு சென்று பணியை தொடர்ந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை தனக்கு தானே, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கடிதத்தில்  தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறை உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்ட கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments