Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகரிக்கவில்லை, இறப்பு விகிதம் குறைவு: கொரோனா குறித்த பாசிட்டிவ் தகவல்

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (20:19 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் சென்னையிலும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டாலும் உண்மையில் சென்னையில் அதிகரிக்கவில்லை என்றுதான் மருத்துவர்கள் கூறி வருகின்றனர் 
 
சென்னையில் ஆரம்பத்தில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இதை வைத்துப் பார்த்தால் இந்நேரம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தினமும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் சென்னையில் 1500 முதல் 2000 மட்டுமே பாதிப்பு ஏற்படுவதால் சென்னையில் பாதிப்பு பெரியதாக இல்லை என்றும் மருத்துவர்கள் கூறி வருகிறார். இன்றும் கூட சென்னையில் 1834 பேர்கள்தான் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிசோதனையை அதிகரித்தால் இன்னும் அதிக அளவு கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்க படுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை பார்க்கும்போது பரிசோதனையை அதிகரித்தாலும் கொரோனா நோயாளிகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறாது.
 
ஏனெனில் தமிழகத்தில் தற்போது வரை தினமும் 50-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பலியாகி வருகின்றனர். பரிசோதிக்கப்படாத கொரோனா நோயாளிகள் ஒருவேளை இருந்தால் இந்நேரம் பலி எண்ணிக்கை அமெரிக்கா ரஷ்யா பிரேசில் போல் அதிகமாக இருக்கும். ஆனால் தமிழகத்தை பொருத்தவரை பலி எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.
 
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் குணமாகி வரும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதும் பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னை மற்றும் தமிழ்நாடு விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு விடும் என்றே நம்பப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments