Publish Date: Thu, 25 Jun 2020 (18:16 IST)
Updated Date: Thu, 25 Jun 2020 (18:19 IST)
நடிகர் அஜித்தின் அறிவுறுத்தியதாகவும் அதன்படி தக்ஷா குழு சிவப்பு மண்டல பகுதிகளில் கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
உலகம் எங்கும் சுமார் 97 லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிகப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவர் , சுகாதாரப் பணியார்கள்,செவிலியர்கள், காவலர்களுடன் சில தன்னார்வ பணியார்களும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்த நிலையில், சிவப்பு மண்டலம் அதிகமுள்ள பகுதிகளில் கிரிமி நாசினி தெளிப்பது பற்றி நடிகர் அஜித் யோசனை மருத்துவர் கார்த்திக் நாராயணம் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அஜித்தின் அறிவுறுத்தலின்படி ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பதில் தக்ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.