Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இறந்த இளைஞரை 3000 கிமீ ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற ஓட்டுனர்!

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (18:23 IST)
சென்னையில் இறந்த இளைஞரை 3000 கிமீ ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற ஓட்டுனர்!
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையில் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடலை 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற ஓட்டுநர் குறித்த தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விவியன் லால்ரெம்சங்கா என்ற 28 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடலை மிசோரம் தலைநகர் ஐய்ஸ்வால் நகருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர்
 
தற்போது ரயில், விமானம் உள்பட எந்த போக்குவரத்தும் இல்லை என்பதால் அவரது உடலை சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கு உரிய அனுமதி பெற்று மிசோரம் மாநிலத்திற்கு இறந்த இளைஞரின் உடலை சுமந்து கொண்டு ஆம்புலன்ஸ் சென்றது., சுமார் 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த அந்த இளைஞரின் உடலை சென்னையை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மிசோரம் மாநிலத்தில் கொண்டு போய் சேர்த்தார். இதனையடுத்து அவரது செயலைப் பாராட்டி மிசோரம் மாநில மக்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments