Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் வருவதால் சென்னை போக்குவரத்தில் நாளை மாற்றம்! – முழு விவரம்!

heavy traffic

Prasanth Karthick

, ஞாயிறு, 3 மார்ச் 2024 (15:14 IST)
நாளை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


 
இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்‌ பத்திரிக்கை செய்தி

மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ அவர்கள்‌ 04.03.2024 அன்று மாலை 17.00 மணியளவில்‌: ஒய்‌.எம்‌.சி.ஏ நந்தனத்தில்‌ நடைபெறும்‌ "தாமரை மாநாடு” பொதுக்கூட்டத்தில்‌ பங்கேற்பதற்காக சென்னை வருகிறார்‌. இந்த கூட்டத்தில்‌ அரசியல்‌ கட்சி தலைவர்கள்‌. மற்றும்‌ கட்சியினர்‌ கலந்து கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின்‌ சென்னை வருகையின்‌ போது விழா நடைபெறும்‌ இடங்களைச்‌ சுற்றியுள்ள சாலைகள்‌ அண்ணாசாலை ஒய்‌.எம்‌.சி.ஏ, நந்தனம்‌ முதல்‌ அண்ணா மேம்பாலம்‌ வரை மதியம்‌ 12 மணி முதல்‌ இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல்‌ ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப்‌ பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பிரதமரின்‌ வருகையையயொட்டியும்‌ விழா நடைபெறும்‌ அதை சுற்றி உள்ள சாலைகளில்‌ குறிப்பாக அண்ணாசாலை, எஸ்‌.வி பட்டேல்‌ சாலை. காந்தி மண்டபம்‌ சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட்‌ பூந்தமல்லி சாலை, சிபெட்‌ சந்திப்பு மற்றும்‌ 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல்‌ ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால்‌ வாகன ஓட்டிகள்‌ தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில்‌ செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

பிற்பகல்‌ 12 மணி முதல்‌ இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள்‌ கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில்‌ தடை செய்யப்படும்‌.
  • மத்யகைலாஷ்‌ முதல்‌ ஹால்டா சந்திப்பு வரை
  • இந்திரா காந்தி சாலை பல்லாவரம்‌ முதல்‌ கத்திப்பாரா சந்திப்பு -.
  • மவுண்ட்‌ பூன்னமல்லி சாலை ராமாபுரம்‌ முதல்‌ கத்திப்பாரா சந்திப்பு வரை.
  • அசோக்‌ பில்லர்‌ முதல்‌ கத்திப்பாரா சந்திப்பு
  • விஜயநகர்‌ சந்திப்பு முதல்‌ கான்கார்ட்‌ சந்திப்பு வரை (கிண்டி) –
  • அண்ணா சிலை முதல்‌ மவுண்ட்‌ ரோடு வரை –
  • தேனாம்பேட்டை, நந்தனம்‌ காந்தி மண்டபம்‌ சாலை.
 
எனவே வாகன ஓட்டிகள்‌ தங்கள்‌ இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? பாஜக பேனர் குறித்து ஜெயகுமார் காட்டம்.!