Publish Date: Sat, 20 Jan 2024 (19:43 IST)
Updated Date: Sat, 20 Jan 2024 (19:52 IST)
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழிதவறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு. இவர் சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நிலையில், விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை தயார் செய்து வருகிறார்.
ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸுக்கு எதிராக பாஜகவுடன் அவர் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து க்கு பகுதிக்கு செல்லும்போது,விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மையத்துடன் இடையூறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வழி தவறியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பிறகு, பாதுகாப்பாக அரக்கு பகுதியில் தரையிறங்கியதாக தெரிவித்துள்ளனர்.