Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (15:36 IST)
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகத்தில்  நிலவுகின்ற வளிமண்ட கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக  அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

வடதமிழகத்தில் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியினால், இன்று  வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்  ஒரு சில இடங்களிலும்,  தென் தமிழகத்தில்  ஒரு சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும்,    நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளாதாக தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments